News November 10, 2025

நாகையில் மானிய விலையில் மீன்பிடி வலை

image

நாகை மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்களை ஊக்குவிக்கப்பட மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு மீன்பிடி வலைகள், குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் செயற்கை கோள் தொலைபேசி மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

நாகை: மக்கள் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 208 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News November 10, 2025

நாகை மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

image

நாகை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart<<>> என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

நாகை: கந்தூரி விழாவிற்கு 45 கிலோ சந்தன கட்டைகள் வழங்கல்

image

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற தர்காவில் 469வது கந்தூரி விழா நவம்பர் 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருடம் தோறும் அரசு சார்பில் 40 கிலோ சந்தன கட்டைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் 45 கிலோ சந்தனக்கட்டைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஆவடி நாசர் கூறியுள்ளார். மேலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

error: Content is protected !!