News November 10, 2025
செங்கல்பட்டு: 1945 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டம்

மதுராந்தகம் தாலுகாவில் உலகளாவிய நகரம் அமைக்கும் திட்டத்திற்காக 1,945.19 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்த பிரம்மாண்ட நகரில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், அதிநவீன உட்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் இடம் பெறும். இதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என TIDCO நிர்வாக இயக்குனர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
செங்கல்பட்டு: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
செங்கல்பட்டு: உங்களிடம் G Pay / PhonePe / Paytm இருக்கா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 10, 2025
செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


