News November 10, 2025

BREAKING திருச்சி: பட்டப்பகலில் இளைஞர் படுகொலை

image

திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை தாமரைச்செல்வன் (24) எனும் இளைஞர் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் பயங்கர ஆயுதங்களுடன் அவரை துரத்தவே, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற தாமரைசெல்வன் அருகில் இருந்த காவலர் குடியிருப்பில் புகுந்துள்ளார். இருப்பினும், அதை பற்றி கவலைப்படாத கும்பல் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

Similar News

News November 10, 2025

திருச்சி: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

திருச்சி: காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

முசிறி பரிசல்துறை ரோடு, காவிரி ஆறு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது. இதன் பேரில் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும், ஊதா நிற டவுசரும் ஊதா வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார். கையில் பி.குமார் என பச்சை குத்தி இருந்தார் இவர் பற்றிய தகவல் தெரிந்தால் முசிறி போலீசாரிடம் தெரிவிக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.

News November 10, 2025

திருச்சி படுகொலை: அண்ணாமலை கண்டனம்

image

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்சி மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பில் ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது’.

error: Content is protected !!