News November 10, 2025
திருவள்ளூர்: லாரி ஏறியதில் உடல் நசுங்கி பலி!

திருவள்ளூர்: சிவன்வாயல் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ்(58) கடந்த நவ.8ஆம் தேதி இரவு 10:30 பைக்கில் திருநின்றவூரில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, லட்சுமி தியேட்டர் அருகே நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். எதிரே வந்த கனரக லாரி, ஜெயராஜ் மீது ஏறி இறங்கியதில் ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.மது போதையில் லாரியை இயக்கிய வட மாநிலத்தை சேர்ந்த அஜய் குமாரை(51) போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 10, 2025
புழல் ஏரியின் இன்றைய நீர் இருப்பு நிலவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியின் இன்றைய(நவ.10) நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி கொண்ட ஏரியில் தற்போது 2866 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது. 155 கனஅடி நீர் வரத்து பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பயன்பாட்டுக்காக 709 கனஅடி வெளியேற்றம் செய்யப்படுகிறது.
News November 10, 2025
திருவள்ளூர்: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 10, 2025
திருவள்ளூர்: உங்களிடம் G Pay / PhonePe / Paytm இருக்கா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


