News November 10, 2025
ராம்நாடு: தையல் எந்திரம் பெற ஆட்சியர் அழைப்பு

ராம்நாடு மக்களே, மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத்சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் அலுவலகத்திற்கு நேரில் உரிய ஆவணங்களுடன் நவ. 25க்குள் வருகை தந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 10, 2025
ராம்நாடு: உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க

ராமநாதபுரம் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News November 10, 2025
ராம்நாடு: 714 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு முழுவதும் 2ம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று காலை நடந்தது. ராமநாதபுரம் 4, பரமக்குடி, கீழக்கரை தலா 1 என 6 மையங்களில் தேர்வு நடந்தது. 1,344 பெண்கள் உள்பட 6,522 விண்ணப்பித்தனர். நேற்று நடந்த தேர்வில் 1,178 பெண்கள் உள்பட 5,808 பங்கேற்றனர். 168 பெண்கள் உள்பட 714 பேர் பங்கேற்கவில்லை. இத்தேர்வு மையங்களை எஸ்பி சந்தீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 10, 2025
ராம்நாடு: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

ராம்நாடு மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் ராம்நாடு வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000472, 9445000473 என்ற எண்களில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்.


