News November 10, 2025

கடலூர்: மின்கம்பத்தில் டூவீலர் மோதி விவசாயி பலி

image

வாழகொல்லையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (50). விவசாயியான இவர் தாமோதரன், வீரமணி ஆகியோருடன் டூவீலரில் வடப்பாக்கம் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலர் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 10, 2025

கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<> இங்கே க்ளிக் <<>>செய்து, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 10, 2025

கடலூர்: ரயில் மோதி துடிதுடித்து பலி

image

விருத்தாச்சலம் ரயில் நிலையம் அருகே நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருச்சி மார்க்கமாக சென்ற ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய விருத்தாசலம் போலீசால் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

News November 10, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!