News November 10, 2025
தமிழகத்தில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு

2027 பிப்ரவரியில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 3 இடங்களில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, காஞ்சிபுரம் மாவட்ட மாங்காடு நகராட்சியில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதன்போது, 34 வகையான கேள்விகள் மக்களிடம் கேட்கப்படும்.
Similar News
News November 10, 2025
நாமக்கல்: G Pay, PhonePe இருக்கா?

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 10, 2025
போர் நிறுத்தம்: டிரம்புக்கு மீண்டும் பாக்., நன்றி

இந்தியா – பாக்., போரை நிறுத்திய டிரம்புக்கு பாக்., PM ஷெபாஸ் ஷெரீஃப் மீண்டும் நன்றி கூறியுள்ளார். டிரம்ப்பின் துணிச்சல், உறுதியான தலைமையினால்தான் இந்தியா – பாக்., இடையிலான போர் தவிர்க்கப்பட்டு, பல லட்சம் மக்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஆனால், டிரம்பின் தலையீட்டால் போர் நிறுத்தம் என்ற வாதத்திற்கு இந்தியா தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News November 10, 2025
மனநலம் குன்றியவர் ஆர்.பி.உதயகுமார்: டிடிவி

விரக்தியின் உச்சத்தில் இருப்பதால்தான் ஆர்.பி.உதயகுமார் தன்னை விமர்சிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார் மனநலம் குன்றியவர் போல பேசுவதாக கூறிய அவர், அதனால் பாவம் அவருக்காக நான் வருத்தப்படுகிறேன் என கிண்டலடித்துள்ளார். மேலும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றுதான் பாஜக முயற்சிப்பதாகவும், கட்சியை பிரிக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.


