News November 10, 2025
தருமபுரி: தொடரும் வேட்டை-ரூ.80,000 அபராதம்!

காரிமங்கலம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுன் (28), சந்தோஷ் (30) ஆகியோர் திருப்பத்தூர் பகுதியில் வேட்டையாடிய முயல் கறியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அப்போது காரிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் அவர்களை பிடித்து, பாலக்கோடு வனச்சரகம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். தருமபுரி மாவட்ட வன அலுவலர் இருவருக்கும் தலா ரூ.40,000 வீதம் மொத்தம் ரூ.80,000 அபராதம் விதித்தார்.
Similar News
News November 10, 2025
தருமபுரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளுங்க!
News November 10, 2025
தருமபுரியில் கரண்ட் கட்!

பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், பொ.துரிஞ்சிபட்டி, நடூர், ஒட்டுபட்டி, பில்பருத்தி, ஆகிய சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 10, 2025
தருமபுரியில் இன்றே கடைசி-2,708 காலியிடங்கள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க: <


