News November 10, 2025
விநாயகர் போல் காட்சி அளிக்கும் முருகர் கோயில் மலை

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த மலையானது பார்ப்பதற்கு யானை உட்கார்ந்த நிலையில், துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் இருக்கும். முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இரு கைகளை உடைய சாத்வீக மூர்த்தியாக கையில் வேலுடன், மயில் வாகனத்தில் காட்சியளிக்கின்றார். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர பக்தர்கள் முருகனை வணங்கி செல்கின்றனர்.
Similar News
News March 17, 2026
திருநெல்வேலி: 8690 கொலைகள் – பகீர் தகவலை கூறிய தமிழிசை

நெல்லை, வண்ணாரப்பேட்டையில் பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் இன்று அளித்த பேட்டியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆனால் அந்த கவலையில்லாமல் முதல்வர் ரீல்ஸ் விளையாடுகிறார். பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஸ்டாலின் அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகு 8690 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது; 59% போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது என்றார்.
News March 17, 2026
பாஜக கேட்டது 35.. அதிமுக கொடுக்க முன்வருவது 27!

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. 35 தொகுதிகள் வழங்குமாறு பாஜக கோரியிருந்த நிலையில், 27 தொகுதிகளை வழங்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை வரும் 20-ம் தேதி இறுதி செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாம். கடந்த முறை அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் பாஜக போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
News March 17, 2026
இனி தமிழ்நாடு இவர்கள் கண்ட்ரோலில் இருக்கும்!

TN தேர்தலுக்காக நாளைமுதல் கண்காணிப்பு பணிகளை ECI தொடங்க உள்ளது. இதற்காக 327 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வேட்பு மனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்தையும் நேரடியாக கண்காணிப்பார்கள். வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள், சட்டம்-ஒழுங்கு & பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றையும் கண்காணிப்பார்கள். இனி ஒட்டுமொத்த தமிழ்நாடும் இவர்கள் கண்காணிப்பில் தான் இருக்கும்.


