News April 19, 2024

தமிழக மாடல் அழகியிடம் ரயிலில் சில்மிஷம்

image

தமிழகத்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவிற்கு ரயிலில் சென்ற அந்த பெண்ணிடம் கேரள இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின் திருவனந்தபுரத்தில் ரயில் நின்றதும் அவர் தப்பியோடிய நிலையில், அந்த பெண் ரயில்வே போலீசிடம் புகார் அளித்துள்ளார். CCTV வீடியோ காட்சி அடிப்படையில் அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

image

124 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துவரும் இந்தியா, தெ.ஆ., அணியின் பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. இந்திய அணி தற்போது 6 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. அக்சர், குல்தீப் களத்தில் உள்ளனர். ஆட்டத்தை ஃபினிஷிங் செய்வார் என எதிர்பார்த்த ஜடேஜாவும் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

News November 16, 2025

பண்ணையாரை நாங்க மிரட்ட முடியுமா? ரகுபதி

image

பாஜகவினரை, திமுகவினர் மிரட்டுவதாக நயினார் நாகேந்திரன் பேட்டி ஒன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அமைச்சர் ரகுபதி, ‘நயினார் நாகேந்திரன் ஒரு பண்ணையார்! அவரை போய் நாங்க மிரட்ட முடியுமா?’ என்று கலகலப்பாக பதில் அளித்துள்ளார். நயினார் நாகேந்திரனும் சாந்தமானவர் தான் என்று கூறிய அமைச்சர், திமுக மிரட்டாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் எனவும் குறிப்பிட்டார்.

News November 16, 2025

சமூக நீதியின் சாபமே திமுக: அன்புமணி

image

சமூகநீதியின் சாபமே தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் தான் என திமுகவை அன்புமணி விமர்சித்துள்ளார். திமுகவினரின் கைகளில் அதிகாரம் கிடைத்தால், சமூகநீதியை காலில் போட்டு நசுக்குவார்கள், அவர்களின் சமூக அநீதிகளை கண்டு அக்கட்சியில் உள்ள வன்னியர்களே கொந்தளித்துள்ளதாகவும் சாடியுள்ளார். திமுக அரசின் சமூகநீதி நம்பிக்கை துரோகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாமகவினருக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!