News April 19, 2024
தேர்தல் பணியில் இருந்த CRPF வீரர் மரணம்

சத்தீஸ்கரில் தேர்தல் பணியின்போது கையெறிகுண்டு தவறுதலாக வெடித்ததில் CRPF வீரர் உயிரிழந்துள்ளார். பஸ்தார் தொகுதிக்குட்பட்ட பிஜப்பூரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த CRPF வீரர் தேவேந்திர குமார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு, அவரது சொந்த ஊரான பஸ்தாரில் நாளை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 11, 2025
BIHAR EXIT POLL: தேஜஸ்விக்கு இந்த முறையும் வாய்ப்பில்லை

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கு(NDA) சாதகமாகவே உள்ளன. MATRIZE-IANS உடன் இணைந்து ABP நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் NDA-வுக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. NDA கூட்டணி 147 முதல் 167 இடங்களை வெல்லும். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி-காங்., உள்ளடக்கிய மகாகத்பந்தன் கூட்டணி 70-90 இடங்கள், மற்றவை 0-7 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
EXIT POLL: பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைப்பது யார்?

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. Gyaan Ka Bhandar India வெளியிட்டுள்ள சர்வேப்படி, NDA: 165-175, MGB: 65-70, மற்றவை: 3-10 இடங்கள் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. People’s Insight கருத்து கணிப்பு முடிவில் NDA: 133-148, MGB: 87-102, JSP: 0-2, மற்றவை: 3-6 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
BIHAR EXIT POLL: மீண்டும் NDA ஆட்சி

பிஹாரில் மீண்டும் NDA ஆட்சி அமையும் என TIMES NOW சேனல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. Satta Bazaar-ன் முடிவுகளை மேற்கோள் காட்டி NDA கூட்டணி 135-140 தொகுதிகள், MGB கூட்டணி 100-115 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


