News November 9, 2025

BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது

image

தங்கள் கட்சி வளர்ந்துள்ளதால், எந்த கூட்டணிக்கு சென்றாலும் 5 சீட்டுக்கு குறையாமல் கேட்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி புதிய குண்டை வீசியுள்ளார். மேலும், கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக போலவே தற்போது புரட்சி பாரதமும் விலகியிருந்து கூட்டணி கதவைத் திறந்து வைத்துள்ளது.

Similar News

News March 3, 2026

தப்பான கோணத்தில் போட்டோ எடுக்குறாங்க: ருக்மினி வசந்த்

image

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகைகளை தவறான கோணங்களில் போட்டோ எடுப்பதாக ருக்மினி வசந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். உடலை மட்டும் ஒரு பொருளாக கருதி Zoom செய்து எடுக்கப்பட்டு SM-ல் அவை பகிரப்படுகின்றன; திட்டமிட்டு ஒரு சில நபர்கள் செய்யும் இந்த செயல் அவமரியாதைக்குரியது & ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். அத்துடன் தாங்கள் கலைக்காக இருக்கிறோம், இப்படிப்பட்ட காட்சிகளுக்காக அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்!

image

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், வேட்பாளர் யார் என்பதை பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்தார். சட்டமன்ற தொகுதிகள் பங்கீடு குறித்த அறிவிப்பு இன்னும் ஒருவாரத்தில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார். அதேசமயம் ராஜ்யசபா சீட் சுதீஷுக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 3, 2026

காங்கிரஸை சீண்டிய திமுக அமைச்சர்!

image

தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும் என ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் பேசிய அவர், திமுகவுடன் இருந்தால்தான் சட்டப்பேரவைக்குள் நுழைய முடியும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும் என்றும், அந்த அந்தஸ்தை இழக்க அவர்கள் விரும்பமாட்டார்கள் எனவும் தெரிவித்தார். <<19287048>>தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கும் நிலையில்<<>>, காங்கிரஸை சீண்டும் வகையில் ரகுபதி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

error: Content is protected !!