News November 9, 2025
BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது

தங்கள் கட்சி வளர்ந்துள்ளதால், எந்த கூட்டணிக்கு சென்றாலும் 5 சீட்டுக்கு குறையாமல் கேட்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி புதிய குண்டை வீசியுள்ளார். மேலும், கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக போலவே தற்போது புரட்சி பாரதமும் விலகியிருந்து கூட்டணி கதவைத் திறந்து வைத்துள்ளது.
Similar News
News November 9, 2025
SHOCKING: ஜடேஜாவை கொடுத்து சஞ்சுவை வாங்கும் CSK?

வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான Mini auction-க்கு முன்பாக வீரர்களின் Trade சூடுபிடித்துள்ளது. RR கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்கும் முயற்சியில் CSK தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஷாக்கிங் செய்தி ஒன்றும் வெளிவந்துள்ளது. ஆம், சஞ்சு சாம்சனை வாங்க, ஜடேஜாவை RR அணிக்கு CSK வழங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது சரியான முடிவு என நீங்கள் நினைக்குறீங்களா?
News November 9, 2025
FLASH: அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அந்தமானின் கடல் பகுதியில் நண்பகல் 12.06 மணிக்கு அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.07 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்வு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த சேத விவரமும் பதிவாகவில்லை. இந்த நிலநடுக்கம் இன்னும் ஆழமாக ஏற்பட்டிருந்தால் பெரிய கடல் சீற்றம் உருவாகியிருக்கும் என கூறப்படுகிறது.
News November 9, 2025
இறந்த பின்னும் ரத்த ஓட்டம்.. இந்தியாவில் முதல் முறை!

ஒருவர் இறந்த பின்பு, குறிப்பிட்ட நேரத்திற்குள் உறுப்புகளை எடுக்காவிட்டால், அதை பயன்படுத்த முடியாது. பொதுவாக, மூளைச்சாவு ஏற்பட்டதும் உறுப்புகள் தானமாக பெறப்படும். இந்நிலையில், டெல்லியில் இறந்த பெண் ஒருவரின் உறுப்புகளை தானமாக பெற, இறந்த உடலில் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர் டாக்டர்கள். HCMCT ஹாஸ்பிடலில், ECMO கருவி மூலம் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, ஆசியாவிலேயே முதல் முறையாக சாதனை படைத்துள்ளனர்.


