News November 9, 2025

ராம்நாடு: காவேரி கூட்டு குடிநீர் வராததால் மக்கள் அவதி

image

முதுகுளத்தூர் அருகே, காக்கூர் கிராமத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக காவேரி கூட்டு குடிநீர் தண்ணீர் வராத காரணத்தால் பொது மக்கள் அவதிபட்டு வருகின்றனர். குடிநீருக்காக ஊர் ஊராக அலையும் அவல நிலை தொடர்வதால், உடனடியாக காவேரி தண்ணீர் வர அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். வாகனங்களில் வரும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

Similar News

News November 9, 2025

ராம்நாடு: அரசு பள்ளி மாணவி தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வு

image

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை திருவள்ளுவர் நகரை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி விஜய மாலினி அடுத்த மாதம் டிசம்பரில் மத்தியப்பிரதேசம் மாநிலம் குணாவில் நடக்கவுள்ள தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ளார். தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வாகி உள்ள மாணவி விஜய மாலினியை பள்ளி தலைமையாசிரியர் வேணி ரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News November 9, 2025

ராம்நாடு: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

image

ராம்நாடு மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் செரிவிக்கவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News November 9, 2025

ராம்நாடு: 200 மீட்டர் உள்வாங்கிய கடல்

image

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்ன பாலம் கடற்கரையில் நேற்று நவ.08 அப்பகுதியில் சுமார் 200 மீட்டர் கடல் உள்வாங்கியதால் நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. இதையடுத்து மீனவர்கள் நாட்டு படகுகளை மீட்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். சிறிது நேரம் கழித்து கடல் நீர் வழக்கமான அளவுக்கு உயர்ந்ததும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

error: Content is protected !!