News November 9, 2025
இறுதி சடங்கில் கண்விழித்து ஷாக் கொடுத்த நபர்!

கர்நாடகாவின் பெட்டகேரி பகுதியில், நாராயணனுக்கு (38) பித்தப்பை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனால், தீவிர சிகிச்சைக்கு பின், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இனி அவரை பார்க்கவே முடியாது என்ற தவிப்பில், நண்பர்களும், உறவினர்களும் இறுதி மரியாதை செய்த நிலையில், திடீரென கண்விழித்து அனைவருக்கும் ஹார்ட் அட்டாக் கொடுத்துள்ளார் நாராயணன். தற்போது, அவருக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News November 9, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

ஆசையாக அப்பாவை சந்திக்க சொந்த ஊருக்கு சென்ற சின்னத்திரை நடிகர் பேரரசு(21), கடலூர், ஆண்டிக்குப்பம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இவர், ‘உப்பு புளி காரம்’ வெப் சீரிஸ் மூலம் பிரபலமானதோடு, உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து வந்தார். வளர்ந்து வந்த இளம் நடிகரை இழந்துவிட்டோம் அவருடன் ‘உப்பு புளி காரம்’ தொடரில் நடித்த சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News November 9, 2025
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் புது அப்டேட்!

நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு, தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
News November 9, 2025
மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மெக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


