News November 9, 2025
தென்காசி: காவலர் தேர்வு குறித்த முக்கிய தகவல்!

தென்காசியில் இன்று (நவ.09) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 8 மையங்களில் நடைபெறுகிறது. மொத்த விண்ணப்பதாரர்கள் 7,911 (ஆண்கள் 5,867, பெண்கள் 2,044). தேர்வு பாதுகாப்பு பணிக்காக 924 போலீசார் நியமிக்கபட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களை சோதனை செய்து, அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கபடுவர். SHARE!
Similar News
News November 9, 2025
தென்காசி : 12th PASS – ஆ…? அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: தமிழக அரசு
2. காலியிடங்கள்: 1429
3. கல்வித் தகுதி: 12th, + 2 ஆண்டு சுகாதார பணியாளர் படிப்பு சான்றிதழ்
4.சம்பளம்.ரூ.ரூ.19,500 – ரூ.71,900
5. கடைசி நாள்: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 9, 2025
தென்காசியில் 10க்கு பைக்குகள் எரிந்து நாசம்

சங்கரன்கோவில் சேர்ந்த முருகேசன் இவர் இலவன்குளம் சாலையில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் இன்று அதிகாலை 2- மணி அளவில் திடீரென கடையின் தீப்பற்றி 10-க்கு மேற்பட்ட வாகனம் எரிந்துள்ளது. இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News November 9, 2025
தோரணமலை சிறப்பு பூஜைக்கு வந்த நடிகர்கள்

தென்காசி மாவட்டம், கடையத்தில் உள்ள தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 27 நட்சத்திரங்களுக்கான பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (நவ.09) நடைபெறும் பூஜைக்கு நடிகர் கிங்காங் மற்றும் முத்துக்காளை ஆகியோர் கலந்து கொள்ள் வருகை தந்தனர். கொல்லம் ரயில் மூலம் புறபட்டு தென்காசி வந்தடைந்தனர்.


