News November 9, 2025

5 மையங்களில் 2ம் நிலை காவலர் பணிக்கு எழுத்து தேர்வு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை காவலர் பணிக்கு ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு விருதுநகர் மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நடைபெறுகிறது. விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் காரியாபட்டி செவல்பட்டி ஆகிய 5 மையங்களில் 7403 ஆண்களும், 2339 பெண்களும் என மொத்தம் 9742 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

Similar News

News November 8, 2025

சிவகாசி மக்களே; தவறவிடாதீங்க!

image

சிவகாசி ஐயப்பன் கோயில் வளாகத்தில் வைத்து வரும் 10, 11 ஆகிய 2 நாட்கள் இலவச புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஆண், பெண் இருபாலருக்குமான புற்றுநோய் கண்டறியும் சோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க விரும்புவோர் 9443125930, 9443378412, 9843024209 ஆகிய அலைப்பேசி எண்களுக்கு அழைத்து முன்பதிவு செய்யலாம்.

News November 8, 2025

சிவகாசி: 134 பேர் பலி.. நடவடிக்கை தேவை

image

சிவகாசி பகுதியில் இன்னும் சில தினங்களில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக தொடங்க உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 200க்கும் மேலான பட்டாசு விபத்துகளில் 134 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு பட்டாசு தொழிலை முடக்காமல், மத்திய, மாநில அரசுகள் பட்டாசு ஆலைகளின் விதிமீறல்களை கட்டுப்படுத்தி தவறுகளை சரி செய்ய நவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக வலுத்து வருகிறது.

News November 8, 2025

விருதுநகர்: 10th தகுதி.. ரூ.50,400 சம்பளத்தில் வேலை., APPLY NOW

image

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து நாளைக்குள் (நவ. 9) விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.15,900 – ரூ.50,400 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!