News April 19, 2024

ஈரோடு: 3 பெண்களின் ஒற்றுமை

image

ஈரோடு, கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பிரியதர்ஷினி, ஜவஹாரா ருக்கையா , இலக்கிய சம்பத் ஆகிய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் முதல் முறையாக ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர். இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பின்பற்றி, ஒற்றுமையாக மூவரும் ஒன்றாக வந்து வாக்களித்ததாக தெரிவித்தனர்.

Similar News

News January 21, 2026

அம்மாபேட்டை அருகே சோகம்: வாலிபர் பலி!

image

பூதப்பாடி மணல்காடு பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (20), கடந்த 17-ம் தேதி நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் பங்கேற்றபோது எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 21, 2026

அம்மாபேட்டை அருகே சிறுமியிடம் அத்துமீறிய நபர் கைது

image

அம்மாபேட்டை அருகே மாத்தூர் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவமனை உதவியாளர் முருகன். இவர் குரும்பபாளையம் பள்ளி சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முருகனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 20, 2026

ஈரோடு: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

ஈரோடு மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை<> இங்கே கிளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்யுங்கள்.அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!