News April 19, 2024
100 வயது முதியவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்

திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வல்லூர் கிராமத்தில் வசிக்கும் 100 வயது முதியவரான ஸ்டீபன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவினை புத் எண் 220க்கு சென்று ஜனநாயக கடமையான தனது வாக்கை பதிவிட்டார். காமராஜர் ஆட்சி காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தனது ஜனநாயக கடமையான வாக்குரிமையை செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
Similar News
News July 5, 2025
ஆரம்பாக்கம் பகுதி நெடுஞ்சாலை சாலையில் ஆக்கிரமிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பஜார் பகுதி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள, இணைப்பு சாலையில் சிறு வியாபாரிகள் காய்கறிகள் பழங்கள் பூ மாலைகள் என வியாபாரம் செய்ய பந்தல் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இணைப்பு சாலை வழியாக அரசு பேருந்துகள் செல்ல முடியாத நிலை, தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செல்கிறது. எனவே வியாபாரிகளுக்கு மாற்றிடம் தந்த போக்குவரத்து துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுப்பு.
News July 5, 2025
திருவள்ளூரில் புதிய கட்சி துவங்கிய ஆர்ம்ஸ்டராங்க் மனைவி

திருவள்ளூரில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 5) தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி எனும் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். நீல நிற கொடி எழுதுகோலை துதிக்கையில் ஏந்திய யானை சின்னத்துடன் உதிக்கும் வெள்ளை நிற சூரியன் உடன், புதிய கட்சி உதயமானது.
News July 5, 2025
திருவள்ளூரில் அதிகரிக்கும் மோட்டார் சைக்கிள் உயிரிழப்புகள்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்த மாணிகண்டன் (28) நேற்று (ஜூலை 4) தனது உறவினர் சந்தோஷ் (17) உடன் மோட்டார் சைக்கிளில் சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது, சர்ச் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மாணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தோஷ் படுகாயம் அடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.