News November 8, 2025
திருப்பத்தூர்: 8th போதும் ; உடனே அரசு வேலை!

திருப்பத்தூர் மக்களே.., தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், காவலர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,000 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ கோட்டப் பொறியாளரிடம் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 8, 2025
திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏரிப்பட்டறை சேர்ந்தவர் கணேசன்(வயது 65) கூலி தொழிலாளியான இவர் நேற்று (நவ.7) இரவு ஜோலார்பேட்டை அடுத்த வளத்துார் மேலாளத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 8, 2025
திருப்பத்தூரில் காவலாளியை அடித்துக் கொலை!

திருப்பத்தூரில் உள்ள கோல்டன் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வரும் பாச்சல் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்கின்ற அலிஜான் (65) என்பவரை மற்றொரு காவலாளி கார்த்திக் என்பவர் இன்று (நவ.8) காலை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News November 8, 2025
திருப்பத்தூர்: பட்டாவில் பெயர் சேர்க்கனுமா? எளிய வழிமுறை

1)திருப்பத்தூர் மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
2)இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
3)இதற்கு<
4) உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


