News November 8, 2025
கள்ளக்குறிச்சி: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே உள்ள கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி சுகுணா(35). இந்நிலையில், சம்பவத்தன்று சுகுணா, விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் , கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: கணவரின் உடலை மீட்டு தர மனைவி கோரிக்கை!

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லா.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் மஸ்கட் நாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி சாலையில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், கணவரின் உடலை மீட்டு தரக் கூறி முருகன் மனைவி வசந்தி நேற்று(நவ.7) டிஆர்ஓ ஜீவா கோரிக்கை மனு வழங்கினார்.
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: கேஸ் வாங்குறீங்களா? இது MUST!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்பு!

கள்ளக்குறிச்சி: புதுஉச்சிமேட்டை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலை இயற்கை உபாதைக்காக வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரைத் தேடினர். அவர் அப்பகுதியில் அலமேலு என்பவரது கிணற்றில் நேற்று சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


