News November 8, 2025
தேனி: வைகை அணையில் நீர் நிறுத்தம்

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஆற்றின் வழியாக நவ.,2ல் திறக்கப்பட்ட நீர் நேற்று (நவ.7) நிறுத்தப்பட்டது. கடந்த ஆறு நாட்களில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு 772 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 115 கன அடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.
Similar News
News November 8, 2025
தேனி: இளைஞர் தற்கொலை

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (34). இதனால் குடிப்பழக்கத்திற்கு சசிகுமார் அடிமையாகி உள்ளார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் மனைவி கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றார். இந்நிலையில் மனவருத்தத்தில் இருந்து வந்த சசிகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.7) வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 8, 2025
தேனி: 10th முடித்தால் ரூ.50,400 சம்பளத்தில் வேலை., APPLY NOW

தேனி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் இங்கு <
News November 8, 2025
தேனியில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (65). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் பொது இடத்தில் தகராறு செய்துள்ளார். இதனை அறிந்த அவரது மகன் முத்துப்பாண்டி, பழனிச்சாமியை கண்டித்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் வேதனை அடைந்த பழனிச்சாமி வீட்டில் யாரும் இல்லாத பொழுது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு (நவ.7) செய்து விசாரணை.


