News November 8, 2025
விருதுநகர்: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு

விருதுநகரில் குரூப்-II/IIA முதன்மைத்தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு நவ.10 முதல் நடைபெற உள்ளது. வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் https://forms.gle/xzgDJcXbC6zQw6H98 மூலம் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
சிவகாசி: 134 பேர் பலி.. நடவடிக்கை தேவை

சிவகாசி பகுதியில் இன்னும் சில தினங்களில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக தொடங்க உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 200க்கும் மேலான பட்டாசு விபத்துகளில் 134 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு பட்டாசு தொழிலை முடக்காமல், மத்திய, மாநில அரசுகள் பட்டாசு ஆலைகளின் விதிமீறல்களை கட்டுப்படுத்தி தவறுகளை சரி செய்ய நவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக வலுத்து வருகிறது.
News November 8, 2025
விருதுநகர்: 10th தகுதி.. ரூ.50,400 சம்பளத்தில் வேலை., APPLY NOW

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <
News November 8, 2025
விருதுநகர்: பாலியல் குற்றவாளி மீது குண்டாஸ்

விருதுநகரில் எஸ்.எஸ் மாணிக்கம் நகரை சேர்ந்த சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த திருச்சுழி சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த முருகன் (29) மீது மேற்கு போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பதை தடுக்க எஸ்.பி கண்ணன் பரிந்துரை பெயரில் ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவின் குண்டர் தடுப்பு சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.


