News November 8, 2025

திருச்சி: அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து

image

திருச்சியில் இருந்து ஓசூர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து நேற்று (நவ.07) பெருகமணி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த கார் மீது கட்டுபாட்டை இழந்து நேருக்குநேர் மோதியது. இதில், காரின் முன்பக்கம் முழுவதுமாக உருக்குலைந்ததுடன், காரில் பயணம் செய்த இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 8, 2025

திருச்சி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

image

திருச்சி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 8, 2025

நவல்பட்டு: பெரிய சூரியூரில் கபடி போட்டி அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், நவல்பட்டு அடுத்த பெரிய சூரியூர் கிராமத்தில், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் பேரவை சார்பில் நடத்தப்படும் முதலாம் ஆண்டு கபடி திருவிழா வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ₹.1 லட்சம், 2-ம் பரிசாக ₹.70,000, 3-ம் பரிசாக ₹.50,000, 4-ம் பரிசாக ₹.50,000 வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 73733 84540, 86754 90655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2025

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று ஊஞ்சல் உற்சவம்!

image

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்களுக்கு நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு நிகழ்வானது இன்று நவ.8ஆம் தேதி தொடங்கி, வருகிற 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மாலை 5 மணி அளவில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின், இரவு 7.15 க்கு ஊஞ்சல் உறசவம் நடைபெறும்.

error: Content is protected !!