News November 8, 2025
வேடசந்தூர் அருகே 24 வயது வாலிபர் விபரீத முடிவு!

வேடசந்தூர் அருகே சுள்ளெறும்பு, முருநெல்லிக்கோட்டை பகுதியில் பழையகோட்டையைச் சேர்ந்த சண்முகம் மகன் பூபதிராஜா (வயது 24) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலையம் விரைந்து சென்று, அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 8, 2025
திண்டுக்கல்: சிறுமியை சீரழித்த நபர்.. அதிரடி தீர்ப்பு!

திண்டுக்கல்: நத்தம் அருகே தேத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (27). இவர் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்தார். நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் சந்திரனுக்கு மொத்தம் 30 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News November 8, 2025
திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. சிறுவன் உட்பட 3 பேர் கைது!

திண்டுக்கல்: சிறுமலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) விளையாட்டு போட்டி நடத்தினார். அப்போது, சிவா (22), பிரகாஷ் (27) ஆகியோர் கேலி செய்தனர். இவர்களுக்கும் சுரேஷ் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இரவு சுரேஷ் வீட்டில் சிவா, பிரகாஷ், 14 வயது சிறுவன் சென்று பெட்ரோல் குண்டு வீசினர். சுரேஷ் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது கொலை மிரட்டல் விடுத்தனர். தாலுகா போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
News November 7, 2025
திண்டுக்கல் காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (நவ-07) சமூக வலைதளம் மூலம் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பொதுஇடங்களில் இலவச Wi-Fi இணைப்புகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தது. இல்லையெனில் செல்போன்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பிறரால் கண்காணிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.


