News November 8, 2025

ஏன் இவ்வளவு தாமதம்? அரசுக்கு EPS கேள்வி

image

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், MLA தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற பணிகளுக்கு உண்டான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுகின்றதாகவும் கூறியுள்ளார். எனவே உடனடியாக அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News November 8, 2025

பெட்டிக் கடைகளில் SIR படிவங்கள் விநியோகம்: அதிமுக

image

SIR படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் கொடுத்து விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக MP இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். ஆனால், கடைகளில் SIR படிவம் விநியோகம் செய்தால், எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இதற்கு பின்னால் DMK இருப்பதாக விமர்சித்துள்ளார்.

News November 8, 2025

National Roundup: சபரிமலையில் செயற்கை குங்குமத்திற்கு தடை

image

*கர்நாடகாவில் ஒரு டன் கரும்பு 3,300-க்கு கொள்முதல் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. *டெல்லியில் காற்று மாசினால் அரசு அலுவலகங்களின் பணி நேரம் காலை 10 மணி-மாலை 6.30 மணியாக மாற்றம். *சபரிமலையில் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை விதிப்பு. *எர்ணாகுளம்-பெங்களூரு உள்ளிட்ட 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை PM மோடி இன்று தொடங்கி வைக்கிறார். *அரசு முறை பயணமாக ஜனாதிபதி இன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம்.

News November 8, 2025

Sports Roundup: இந்தியா A முன்னிலை

image

*தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான 2-வது பயிற்சி போட்டியின், 2-ம் நாள் முடிவில் இந்தியா A அணி 112 ரன்கள் முன்னிலை. *ரஞ்சி கோப்பையில் இன்று ஆந்திரா Vs தமிழகம் மோதல். *2025 மகளிர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு. *ஆசிய பார்வையற்றோர் ஜூடோ சாம்பியன்ஷிப்பில், கபில் பர்மர் வெள்ளி வென்றார். *Alto ஓபன் ஸ்குவாஷில் ரதிகா சீலன் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

error: Content is protected !!