News November 7, 2025

கோவை சம்பவம்: அதிரடி நடவடிக்கை

image

கோவையில் அனுமதி இன்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சமீபத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பவன்குமார் தலைமையில் சமூக நலத்துறை, காவல் துறை இணைந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. அனுமதியின்றி இயங்கும் விடுதிகள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 7, 2025

கோவைக்கு மற்றொரு வந்தே பாரத் சேவையை தொடங்கும் மோடி!

image

கேரள மாநிலம் எர்ணாகுளம்–பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நவம்பர் 8 அன்று காலை 8 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்குகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் இந்த ரயில் சேவை தெற்கு ரயில்வே நேர அட்டவணையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொங்கு மண்டல பயணிகள் பெரிதும் பயனடைய உள்ளனர்.

News November 7, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (07.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

நாளை முதல் சிறப்பு வரிவசூல் முகாம்கள்

image

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 2025-26 இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் வசூலிக்க சிறப்பு முகாம்கள் நவம்பர் 8, 9 தேதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!