News November 7, 2025
விஜய் நடத்தியது பித்தலாட்டம்: வைகோ

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை, சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறியது பித்தலாட்டம் என்று வைகோ விமர்சித்துள்ளார். சம்பவம் நடந்தபோது விஜய் ஏன் திருச்சியில் தங்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள வைகோ, உயிரிழப்பு செய்தி அறிந்ததும் சென்னை ஓடிச்சென்று விட்டதாக விமர்சித்துள்ளார். யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என CM பேசிய பின்பும், சகட்டு மேனிக்கு பேசியுள்ளதாக சாடியுள்ளார்.
Similar News
News February 10, 2026
இந்திய வீரர்கள் ரப்பர் பேட் பயன்படுத்துகிறார்களா?

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பேட்களில் ரப்பர் பயன்படுத்துவதால்தான் ஜெயிக்கிறார்கள் என இலங்கை கிரிக்கெட் வீரர் பனுகா ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது எப்படி சாத்தியம் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை எனவும் ரப்பர் லேயர் இருக்கும் பேட்களை மற்றவர்களால் வாங்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விஷயம் அனைத்து வீரர்களுக்கும் தெரியும் எனவும் பனுகா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வெளியானது GOOD NEWS

2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிப்படி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்மூலம், 11.7 லட்சம் பேர் பயனடைந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், நகைக் கடன் உள்ளிட்ட தள்ளுபடி வாக்குறுதிகளை வெளியிட அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 10, 2026
இந்தியாவுக்கு விரிக்கப்பட்ட வலை: கார்கே

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு விரிக்கப்பட்ட வலை என்று கார்கே விமர்சித்துள்ளார். ரஷ்ய எண்ணெயை நிறுத்த ஒப்புக்கொண்டதும், மரபணு மாற்றப்பட்ட தீவனங்கள் & பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய இசைவு தெரிவித்ததும் இந்திய விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஒப்பந்தப்படி ஆடை ஏற்றுமதியில் இந்தியாவை விட வங்கதேசத்திற்கே அதிக ஆதாயம் என்றும் கார்கே தெரிவித்தார்.


