News November 7, 2025
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு பெண் பலி

திருப்பூர், ஊத்துக்குளி அருகே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மைலால் (55). அவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மைலால் வேலைக்கு செல்வதற்காக புதூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
திருப்பூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

திருப்பூர் மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <
News January 30, 2026
தாராபுரம் அருகே விபத்து

தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஒட்டன்சத்திரம் சாலையில் இன்று ஆம்னி காரும், இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
அவிநாசி அருகே விபத்து: இளைஞர் பலி

அவிநாசி சின்னேரிபாளையத்தைச் சேர்ந்த மொபைல் கடை உரிமையாளர் சுரேஷ் (27), கோவையிலிருந்து திரும்பும்போது தனது காரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


