News November 7, 2025
தேனி அருகே லாரி மோதியதில் ஒருவர் பலி

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (36). இவர் நேற்று (நவ.6) அவரது பைக்கில் உப்புக்கோட்டை பகுதியில் சென்றுள்ளார். அப்போது எதிர் திசையில் செல்வேந்திரன் என்பவர் ஓட்டிவந்த லாரி ஈஸ்வரன் பைக் மீது மோதியது. இதில் ஈஸ்வரன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
தேனி: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

தேனியில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
தேனி: இளம்பெண் தற்கொலை

போடியை சேர்ந்த அசோனியா (30) என்பவர் அவரது கணவரை விவாகரத்து செய்த நிலையில் காமாட்சி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தேனியில் வசித்து வந்துள்ளார். சில தினங்களாக காமாட்சி மற்றும் அசோனியாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அசோனியா நேற்று (நவ.6) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News November 7, 2025
தேனி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

தேனி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!


