News November 7, 2025

BREAKING விருதுநகருக்கு மஞ்சள் எச்சரிக்கை

image

தமிழக உள் பகு​தி​களின் ​மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று முதல் நவ.11 வரை ஒருசில இடங்​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இந்நிலையில் இன்று விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் அலட்ர்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இது ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.

Similar News

News November 7, 2025

விருதுநகர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

விருதுநகர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News November 7, 2025

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி பலி

image

ஆலங்குளம் அருகே கீழாண்மறைநாடு இந்திரா காலனியை சேர்ந்தவர் சின்ன முனியாண்டி (66). பட்டாசு தொழிலாளியான இவர் செவல்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சமத்துவபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக்கின் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News November 7, 2025

EXCLUSIVE விருதுநகரில் 16,421 பேரை கடித்த நாய்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் 01.01.2024 முதல் 31.07.2025 வரை நாய்கடியால் 16,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் – 3134, அருப்புக்கோட்டை – 891, ராஜபாளையம் – 1311, திருச்சுழி – 1048, வத்திராயிருப்பு – 1674, சாத்தூர் – 2259 , காரியாபட்டி – 3145, சிவகாசி – 2959 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

error: Content is protected !!