News November 7, 2025

BREAKING சிவகங்கைக்கு அலர்ட் விடுத்த ஆய்வு மையம்

image

தமிழக உள் பகு​தி​களின் ​மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று முதல் நவ.11 வரை ஒருசில இடங்​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இந்நிலையில் இன்று விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் அலட்ர்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இது ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.

Similar News

News November 7, 2025

காரைக்குடி: இளம் பெண் கொலை – ஒருவர் கைது

image

காரைக்குடி அருகே ஆவடைபொய்கை என்ற இடத்தில் நேற்று மகேஸ்வரி என்ற பெண் அவரது காரில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சி அடிப்படையில் சசிகுமார் என்ற இளைஞரை கைது செய்து விசாரித்ததில், அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாத போலீசார் தெரிவித்துள்ளனர்.

News November 7, 2025

சிவகங்கை: விவசாயிகள் நில விவர பதிவு நீட்டிப்பு

image

விவசாயிகளின் நில உடைமை விவர பதிவு செய்யும் காலக்கெடு ஏப்ரல்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் சுந்தர மகாலிங்கம் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் பல்வேறு திட்டங்களின் நன்மைகளை பெறும் போது, விவசாயிகள் ஒவ்வொரு முறையும் தங்களது நில விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

image

சிவகங்கை மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நவம்பா் மாதத்துக்கான மக்கள் குறைதீா் சிறப்பு முகாம் நாளை (நவ.8) சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனுவாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!