News November 7, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் 2025-ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் வருகிற டிச.1ஆம் தேதிக்குள் பயிர் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ.2102 காப்பீடு தொகை செலுத்த வேண்டும். இத்தொகையை அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் வாயிலாக செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

திருச்சி மாவட்டத்திற்கு 2-ஆம் இடம்!

image

திருச்சி மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 29,688 மாணவர்களில் 18,882 மாணவர்கள் அடிப்படை கற்றல் அடைவு தேர்வில் தேர்ச்சி (63%) பெற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தையும், திருச்சி மாவட்டம் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளது. தேர்ச்சி பெறாத 10,882 மாணவர்களுக்கு மீண்டும் 6 வாரங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News November 7, 2025

திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலின்

image

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற நவ.9-ம் தேதி திருச்சி வருகை தர உள்ளார். அதைத் தொடர்ந்து மறுநாள் 10-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இந்த திருமண நிகழ்ச்சி திருச்சி சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் நடைபெற உள்ளது.

News November 7, 2025

திருச்சி: சுகாதார ஆய்வாளர் வேலை அறிவிப்பு

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து வரும் நவ.16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!