News November 7, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் 2025-ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் வருகிற டிச.1ஆம் தேதிக்குள் பயிர் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ.2102 காப்பீடு தொகை செலுத்த வேண்டும். இத்தொகையை அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் வாயிலாக செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 29, 2026

திருச்சி: வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை

image

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில், இரண்டு இளநிலை திட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் https://nrcb.org.in/nrcbadmin/webfs/vacancy/No_1_Recruitment_notice.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் பிப்.13ஆம் தேதிக்குள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2026

திருச்சி: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>.
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 29, 2026

திருச்சி: காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

image

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சாமுவேல் ஞானம் என்பவர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வீரங்கிநல்லூரை சேர்ந்த புகார்தாரர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யாமல் இருக்க ரூ.50,000 லஞ்சம்பெற்ற அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!