News November 7, 2025

நெல்லை: வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

திருக்குறுங்குடி சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (30), வெளிநாட்டில் கட்டடத் தொழிலாளியாக இருந்து விடுமுறைக்கு வந்தவர். இவர் மது அருந்திவிட்டு மனைவி லட்சுமியுடன் சண்டையிட்டதால், அவர் குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்குச் சென்றார். இதனால் மனமுடைந்த செல்வக்குமார், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் விசாரணை.

Similar News

News November 7, 2025

நெல்லை: கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – எஸ்.பி

image

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ் பி சிலம்பரசன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை சகஜமாக நடைபெற்று வருகிறது. இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. இத்தகைய செயல்களை தடுப்பதற்கு முதலில் கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். எனவே கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

News November 7, 2025

நெல்லை முக்கிய ரயில் இன்று பகுதி தூரம் ரத்து

image

திருநெல்வேலி வழியாக பாலக்காடு – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரயில் கோவில்பட்டி ரயில் நிலைய யார்டு பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக பாலக்காட்டில் இருந்து விருதுநகர் வரை மட்டுமே இன்று இயக்கப்படும். மறு மார்க்கமாக திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் இன்று பிற்பகல் 3:20 மணிக்கு விருதுநகரில் இருந்து பாலக்காட்டிற்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில் இன்று நெல்லை திருச்செந்தூருக்கு வராது.

News November 7, 2025

நெல்லை: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 இது முக்கியம்!

image

நெல்லை மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு:0462-2576265. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.

error: Content is protected !!