News November 7, 2025
திருவாரூர்: கடலில் தவறி விழுந்தவர் பலி

முத்துப்பேட்டை கடல் முகத்துவார பகுதியில் மன்னங்காடை சேர்ந்த மீனவர் ரவி (39) மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் ரவியை சடலமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
திருவாரூர்: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.7) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
திருவாரூர்: சுகாதார ஆய்வாளர் வேலை அறிவிப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 7, 2025
திருவாரூர் அருகே அரசு மருத்துவமனையில் ரகளை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விமலநாதன் (23) என்ற வாலிபர் காலில் அடிப்பட்டு சிகிச்சைக்காக கடும் குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை விமலநாதன் ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட விமலநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


