News November 7, 2025

இராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கசென்ற மீனவர்களை கடந்த அக். 9 நள்ளிரவு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 30 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் 26 மீனவர்கள் முதல்முறையாக கைது செய்யப்பட்டதால் தலா ரூ.2.50 லட்சம் அபராதமும், 2வது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேருக்கு தலா ரூ.2.75 லட்சம் அபராதம் விதித்தார்.

Similar News

News November 7, 2025

ராம்நாடு: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 – இது முக்கியம்?

image

இராமநாதபுரம் மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு: 04567-230466. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.

News November 7, 2025

ராம்நாடு: புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி

image

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் 40 பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன. இந்த இருக்கைகளின் மேல் பயணிகளின் வசதிக்காக 10 மின்விசிறிகள் அமைக்கபட்டுள்ளன. தற்பொழுது வெயில் அடித்து வரும் நிலையில் பயணிகள் மின்விசிறி இன்றி சிரமப்படுகின்றனர். எனவே இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 7, 2025

இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு

image

இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அவர் தற்போது பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். இதையடுத்து தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரெஜினி நேற்று இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்று கொண்டார்.

error: Content is protected !!