News November 7, 2025
நீலகிரியில் 2 பேர் அதிரடி கைது!

நீலகிரி: உதகை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய சானு, பானாசானு என்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். வட மாநிலத்தை சேர்ந்த இவர்கள், பள்ளி – கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மேலும் உள்ள தொடர்புகள் மற்றும் கும்பல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News November 7, 2025
நீலகிரி: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

நீலகிரி மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <
News November 7, 2025
நீலகிரி: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

1) நீலகிரி மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 7, 2025
நீலகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

நீலகிரி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!


