News November 7, 2025
அரியலூர்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரியலூர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், நவம்பர் 8ஆம் தேதியன்று அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் வட்டாச்சியர் அலுவலகங்களில் நடைப்பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் உள்ளிட்டவைகள் குறித்து விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என்றார்.
Similar News
News November 7, 2025
அரியலூர்: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

அரியலூர் மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 7, 2025
அரியலூர்: புதிய நூலக கட்டிடம் திறப்பு

ஜெயங்கொண்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தினை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அவர்கள் நூலகத்தை பார்வையிட்டு, தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க கோரி அரசு அலுவலர்களிடம் கூறினார்.
News November 7, 2025
அரியலூர்: 12th போதும்! அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


