News November 7, 2025

தஞ்சை: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

image

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சினம்பூண்டி சாளுவன்பேட்டைத் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் மனைவி ஜெகதாம்பாள். இவர் வீட்டின் முன்பு தன் பேரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அதே தெருவை சேர்ந்த சின்னராசு மகன் ஆனந்த் என்பவர் குடிபோதையில் ஜெகதாம்பாளை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெகதாம்பாள் அளித்த புகாரின் பேரில் ஆனந்தை போலீசார் கைது செய்தார்.

Similar News

News November 7, 2025

தஞ்சை: சாலை விபத்தில் துடிதுடித்து பலி!

image

பேராவூரணி அருகே சின்ன ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த சுந்தரவடிவேல் டூவீலரில் கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் கடை வீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், வழியில் மீன் ஏற்றி வந்த மினி லாரி, சுந்தரவடி வேல் மீது மோதியதில், அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 7, 2025

தஞ்சை: 12th போதும்! அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>> நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 7, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.38 லட்சம் டன் நெல் கொள்முதல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் புதன்கிழமை வரை 66 நாள்களில் 2.38 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரம் டன் நெல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும். இதுவரை 47 ஆயிரத்து 594 விவசாயிகளுக்கு ரூ. 574 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திருமதி.பா. பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!