News April 19, 2024

வாக்குப்பதிவு மையத்தில் திடீர் ஆய்வு

image

திருச்சிராப்பள்ளி காஜாமலை குழந்தை ஏசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் பொதுமக்கள் வாக்களிப்பதை இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 20, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 3,538 மனுக்கள்

image

திருச்சியில் இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. அதில் 3538 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. திருத்தாந்தோணி சாலையில் 1085 மனுக்களும், மேலசிந்தாமணியில் 891, கல்லக்குடியில் 361, அதவத்தூரில் 248, லால்குடியில் 480, தா.பேட்டையில் 93, துறையூரில் 522, புள்ளம்பாடியில் 699 மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2025

திருச்சி மக்களே இனி அலைச்சல் வேண்டாம்

image

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பள்ளி முதல் ஆதார், பாஸ்போர்ட் பெறுவதற்கு மிக முக்கியமானதாகும். பிறப்பு சான்றிதழ் பெற இனி அலைச்சல் வேண்டாம். புதிய சான்றிதழ் பெறுவதற்கும், தொலைந்த சான்றிதழ் பெறுவதற்கும்<> இங்கே க்ளிக் செய்து <<>>சுலபமாக பெற முடியும். மேலும் உங்கள் பகுதி பிறப்பு பதிவாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரை அணுகியும் பெற முடியும். இதனை LIKE மற்றும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

திருச்சி: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

image

திருச்சி மக்களே, தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து உங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

error: Content is protected !!