News November 7, 2025
நீருக்குள் இருந்து காட்சி கொடுக்கும் சிவன்!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியில் மேலமலை என்ற சிறிய மலை குன்று உள்ளது. அக்குன்றில் தலையருவி சிங்கம் சுனையில், 15 அடி ஆழத்தில் ஜீரஹரேஸ்வரர் என்னும் குடைவரைக் கோவில் இருக்கிறது. இக்கோயிலில் குடைந்தே உருவாக்கப்பட்ட சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவராத்திரி அன்று, உள்ளூர் மக்கள் சுனையில் உள்ள நீரை வெளியேற்றிவிட்டு, சிவனை தரிசித்து செல்கின்றனர். SHARE IT.
Similar News
News November 7, 2025
வங்கிக் கணக்கில் பணம்.. உடனே செக் பண்ணுங்க

2-10 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இல்லாத அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுக்காமலே விட்டுவிட்டீர்களா? உங்களுக்காக RBI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர் (அ) வாரிசுதாரர்கள் இந்த பணத்தை வட்டியுடன் பெற முடியும். நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாத உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க KYC ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் பழைய வங்கி கணக்கின் பேலன்ஸை <
News November 7, 2025
சர்வர் கோளாறால் டெல்லியில் விமான சேவை பாதிப்பு!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் (ATC) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. கோளாறை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்புகொண்டு நிலவரங்களை தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 7, 2025
Manchester-ஐ Monster-ஆக மாற்றிய திமுக: நயினார்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை <<18222861>>பெண் கடத்தல்<<>> சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் Manchester-ஐ, Monster-கள் உலா வரும் பகுதியாக மாற்றியதே திமுகவின் சாதனை என விமர்சித்துள்ளார். TN காவல்துறை, திமுகவின் ஏவல்துறையாக செயல்படக் கூடாது எனவும், இளம்பெண்ணை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.


