News November 7, 2025

அரசியல் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி

image

<<18215650>>அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான<<>> வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் காத்திருக்க அனுமதி. அதேபோல், அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள், இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

Similar News

News February 21, 2026

OPS-ன் திமுக ஆதரவால் மீண்டும் அரசியல் மோதலா?

image

OPS-ன் திடீர் திமுக ஆதரவு, அவர் விரைவில் திமுக கூட்டணியில் இணைவதற்கான சமிக்ஞையே என கூறப்படுகிறது. ஒருவேளை அவர் திமுகவோடு இணைந்தால், தேனி திமுக முகமாக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் உடன் மீண்டும் மோதல் உண்டாகும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தொகுதி போட்டி, ஆதரவாளர்கள் மோதலும் உண்டாகலாம் என்றும் கூறப்படுகிறது. என்ன முடிவெடுப்பார் ஓபிஎஸ்? உங்கள் கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News February 21, 2026

BREAKING: அதிமுக வெளியிட்ட முக்கிய ஆதாரம்!

image

அமைச்சர் KN நேரு மீதான ₹ 1,020 கோடி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, ED அனுப்பிய கடிதத்தின் முக்கிய ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. ஆவணத்தின் 51-வது பக்கத்தில் டெண்டர்களுக்காக 7.5% – 10% வரை கட்சி நிதி(Party Fund) பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சர், அவரது மகனை காப்பாற்றவே காவல்துறை FIR பதிவு செய்யாமல் இருப்பதாகவும் சாடியுள்ளது.

News February 21, 2026

தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு: திருப்பூரில் 6 பேர் கைது

image

பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக SM-ல் பதிவிட்டதாக திருப்பூரில் பதுங்கியிருந்த 6 பேரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் & 16 சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்துள்ளது. அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!