News November 7, 2025
அடுத்த சில மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பொழியும்

அடுத்த சில மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவு நேர பயணம் மேற்கொள்வோர் பாதுகாப்பாக செல்லுங்கள். மேலும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News November 7, 2025
நவம்பர் 7: வரலாற்றில் இன்று

*1858-கல்வியாளர் பிபின் சந்திர பால் பிறந்தநாள். *1867–நோபல் பரிசு வென்ற மேரி கியூரின் பிறந்தநாள். *1888–நோபல் பரிசு வென்ற சி.வி.ராமன் பிறந்தநாள். *1969–நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாள். *1975–இயக்குநர் வெங்கட் பிரபு பிறந்தநாள். *1993 – திருமுருக கிருபானந்த வாரியார் மறைந்த நாள். *2000 – அரசியல்வாதி சி.சுப்பிரமணியம் மறைந்த நாள்.
News November 7, 2025
சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய இந்தியர்கள் மீட்பு

மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய 26 பெண்கள் உள்பட 270 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மொத்தம் 465 இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்க நாளை விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட உள்ளன. வேலைவாய்ப்பு என அழைத்து செல்லப்பட்டு, சைபர் மோசடிகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,500 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 7, 2025
விவேகானந்தர் பொன்மொழிகள்!

*நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ். *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. *வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.


