News April 19, 2024

நீலகிரி கலெக்டர் ஜனநாயக கடமை

image

நீலகிரி மாவட்டத்தில் காலை 7 மணிமுதல் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. உதகை புனித சூசையப்பர் கல்வியல் கல்லூரி வாக்குச் சாவடியில் இன்று நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா பல்வேறு வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை பார்வையிட்டார்.

Similar News

News September 20, 2025

ஊட்டியில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு!

image

நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜு வெளியிட்ட செய்தி குறிப்பில்; நாளை ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சிக்கான மாபெரும் பொதுக்கூட்டம் உதகை ஏடிசி ஜீப் நிறுத்தம் முன்பு மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சிறப்புரை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

News September 19, 2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

image

ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News September 19, 2025

தூய்மை பணியை மேற்கொள்ள ஆட்சியர் உறுதிமொழி!

image

தூய்மை மிஷின் 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பல்வேறு அலுவலகங்களில் அந்தந்த துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தூய்மை பணியில் மேற்கொள்ள வேண்டும், என அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

error: Content is protected !!