News April 19, 2024

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு என்பது பொய்

image

தமிழகத்தில் காலை முதல் அமைதியாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதற்கிடையில் வட சென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்திற்கு வாக்கு செல்வதாக ஒருவர் புகார் அளித்தார். இதனால், திமுக, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, புகார் அளித்த அந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பொய்யான தகவலை கூறியது தெரியவந்துள்ளது.

Similar News

News November 11, 2025

BREAKING: தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம்

image

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை தொடரலாம் என SC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் SIR மேற்கொள்வதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக 2 வாரத்தில் ECI பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும். SIR-க்கு ஆதரவாக இந்த வழக்கில் அதிமுக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்க SC மறுப்பு தெரிவித்துள்ளது.

News November 11, 2025

வகை வகையான கார்கள் பார்க்க ஆசையா?

image

காலத்தால் அழியாத பொறியியல் நேர்த்தியுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல கார்களுக்கு இப்போதுவரை நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கார்களுக்கென தனி அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எங்கெல்லாம் இந்த விண்டேஜ் அருங்காட்சியகம் அமைந்துள்ளது என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்கள் இங்கே சென்றுள்ளீர்களா? கமெண்ட் பண்ணுங்க, SHARE பண்ணுங்க.

News November 11, 2025

BREAKING: டாஸ்மாக் கடைகளில் ரூல்ஸ் மாறுகிறது

image

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் முதல்கட்டமாக 70 டாஸ்மாக் கடைகளில் MRP விலையில் மது விற்பனை செய்யும் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும்போது, பாட்டிலில் அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் QR CODE உருவாக்கப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

error: Content is protected !!