News November 6, 2025

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (நவ.6) இரவு முதல் நாளை (நவ.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 7, 2025

வேலூர்: கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரான இவரை, கஞ்சா விற்பனை தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததாக நினைத்து, அதே பகுதியை சேர்ந்த திருமலை (36) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளியான திருமலை (36) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று (நவம்பர் 6) நீதிபதி கோகுல கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

News November 6, 2025

வேலூரில் நாளை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், நாளை நவம்பர் 7-ம் தேதி காலை 10:30 மணி அளவில், மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து காவலர்களுக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உள்ளார். வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 6, 2025

வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

image

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ம் தேதி காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் 100 -க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!