News November 6, 2025
நேர்மையாக தேர்தல் நடந்தால், NDA இருக்காது: பிரியங்கா

பிஹார் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், கோவிந்த்கஞ்ச் பகுதியில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டார். இதில் பேசிய அவர், பிஹார் தேர்தல் நேர்மையாக நடந்தால், NDA ஆட்சி தூக்கி எறியப்படும் என்று குறிப்பிட்டார். வளர்ச்சியை விட மதத்திற்கே பாஜக முன்னுரிமை அளிப்பதாக விமர்சித்த அவர், கடந்த 3 ஆண்டுகளில் பிஹாரில் 27 பாலங்கள் இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டினார்.
Similar News
News February 6, 2026
விஜயகாந்த் மரணம் குறித்து அவதூறு… டிஜிபியிடம் புகார்

விஜயகாந்த் மரணம் குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்டதாக யூடியூபர்கள் சிலர் மீது தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி சூர்யா, தமிழா தமிழா பாண்டியன், சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேமுதிகவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்தில் பிரேமலதா குறித்து அவதூறு பரப்பப்படுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
News February 6, 2026
மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல் நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News February 6, 2026
வங்கி கடன் தள்ளுபடி.. சந்தோஷமான செய்தி வந்தாச்சு

தேர்தலையொட்டி, கூட்டுறவு <<19007011>>வங்கி கடன் தள்ளுபடி<<>> தொடர்பான வாக்குறுதிகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. இதனால், கூட்டுறவு வங்கிகளில் மக்கள் ஆர்வமுடன் கடன் பெற்று வருகின்றனர். 2025 டிசம்பர் வரை, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட கடன் தொகை ₹85,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், திருமணம் உள்ளிட்ட குடும்ப செலவுகளுக்காக குறைந்த வட்டியில் ₹10 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாம்.


