News November 6, 2025
நேர்மையாக தேர்தல் நடந்தால், NDA இருக்காது: பிரியங்கா

பிஹார் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், கோவிந்த்கஞ்ச் பகுதியில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டார். இதில் பேசிய அவர், பிஹார் தேர்தல் நேர்மையாக நடந்தால், NDA ஆட்சி தூக்கி எறியப்படும் என்று குறிப்பிட்டார். வளர்ச்சியை விட மதத்திற்கே பாஜக முன்னுரிமை அளிப்பதாக விமர்சித்த அவர், கடந்த 3 ஆண்டுகளில் பிஹாரில் 27 பாலங்கள் இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டினார்.
Similar News
News February 5, 2026
வெறுங்காலில் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?

காலணிகள் அணியாமல் புல், மண் தரைகளில் நடப்பது மன அழுத்தத்தை குறைப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இதனால், உடல் தசைகள் சுறுசுறுப்படைவதுடன், ரத்த ஓட்டம் சீராகி நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது; தூக்கத்தின் தரம் மேம்பட்டு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதாகவும் குறிப்பிடுகின்றனர். எனவே, நீங்களும் காலணிகள் அணியாமல், தினமும் 15-30 நிமிடங்கள் இயற்கையான தரையில் வெறுங்காலுடன் நடக்க தொடங்குங்கள்.
News February 5, 2026
இரவு படுத்தா தூக்கம் வரலையா?

தூக்கம் கெட்டுப்போவதில் மனஉளைச்சல் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு இன்றைய வாழ்க்கை முறையும், தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடும் மனப்பான்மையும் முக்கிய காரணிகளாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, தினமும் தூங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன் செல்போன் பயன்பாட்டை தவிர்த்து, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது அவசியம் எனவும் இதனால் மனநிம்மதி கிடைத்து நன்றாக தூங்க முடியும் எனவும் கூறுகின்றனர்.
News February 5, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,500: ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500-ஆக உயர்த்தி CM ரங்கசாமி அறிவித்திருந்தார். உயர்த்தப்பட்ட நிதியுதவி திட்டத்தை இன்று அவர் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ₹2,500 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். எவ்வளவு உயரும் என்ற அறிவிப்பு தேர்தல் வாக்குறுதியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


