News November 6, 2025

காணாமல் போன பள்ளி மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், பகண்டை அருகே உள்ள அவரியூர் கிராமத்தில் மாணவர்களை பார்த்த பொதுமக்கள் பகண்டை கூட்டுச்சாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News November 7, 2025

கள்ளக்குறிச்சி: திருமணத்திற்கு இலவச தங்கம், நிதி பெறுவது எப்படி?

image

1)கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

2)இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.

3)திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

4)திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. (SHARE IT)

News November 7, 2025

கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டில் பிரச்னையா..? இங்க போங்க!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், மாற்றம், முகவரி மாற்றம், உதவி சார்ந்த சந்தேகங்கள், ரேஷன் கடைகள் குறித்து புகார் போன்றவைகளுக்கு நாளை(நவ.8) கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கவுள்ளது. இதில், அனைவரும் கலந்துகொண்டு பயனடையலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 7, 2025

கோமுகி அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக இன்று (நவ.7) முதல் 29 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக நீர்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோமுகி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலமாக சுமார் 10 ஆயிரத்து 860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!