News November 6, 2025
அரியலூர்: நூலகத்தினை ஆய்வு செய்த எம்எல்ஏ

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட திறக்கப்பட்ட கிளை நூலக கட்டிடத்தினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதில் பயின்று வரும் மாணவ மாணவிகளிடம் நூலகம் குறித்து கேட்டறிந்தார். மேலும் நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார். இதில் நூலக அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் மாணவர்கள் வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 7, 2025
அரியலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் தாசில்தார் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகள், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 7, 2025
அரியலூர்: மாரத்தான் போட்டி அறிவிப்பு

அரியலூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்ட போட்டிக்கு இணையான, நெடுந்தூர ஓட்ட போட்டிகள் (நவ.8) தேதி காலை 07.30 மணியளவில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்தப் போட்டிகளின் விவரங்கள் தொடர்பாக, அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News November 7, 2025
அரியலூர்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரியலூர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், நவம்பர் 8ஆம் தேதியன்று அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் வட்டாச்சியர் அலுவலகங்களில் நடைப்பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் உள்ளிட்டவைகள் குறித்து விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என்றார்.


