News November 6, 2025
கிருஷ்ணகிரி: கனமழை எச்சரிக்கை!

கிருஷ்ணகிரியில் இன்று (நவ.06) தற்போது திடீரென வானிலை மாறியது. இதனால் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிவிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால், 7,697 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News February 13, 2026
கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து!

காவேரிப்பட்டினம் அடுத்த பாலேகுளி கிராமத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவர் நேற்று (பிப்-12) வேலம்பட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிரே பைக்குள் வந்த மணிவண்ணன் மீது மோதியுள்ளார். இதில் அருள்முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மணிவண்ணன் படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
கிருஷ்ணகிரியில் தீயில் கருகி பலி!

சிங்காரபேட்டை அடுத்த கீழ்மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் நேற்று (பிப்.12) வீட்டில் தனியாக இருந்த போது திடிரென மின்கசிவு ஏற்பட்டது. அப்போது பெட் ரூமில் திடீரென தீ பிடித்தது. அதில் ரவியின் மேல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. ரவியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் ரவியின் கருகிய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.13) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


