News November 6, 2025
திருவாரூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

திருவாரூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 6, 2025
திருவாரூர்: தேனீ பயிற்சி முகாமை பார்வையிட்ட ஆட்சியர்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தேனீ வளர்ப்பு பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் பயிற்சியினை திடீர் ஆய்வு செய்தார். பயிற்சியாளர் களிடம் பயிற்சி குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார்.
News November 6, 2025
திருவாரூர்: பெண் குழந்தை உள்ளதா? இத செய்ங்க!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE IT NOW…
News November 6, 2025
திருவாரூர்: செவிலியரை வெட்டியவர் கைது

வடுவூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செவிலியரை வழிமறித்து அரிவாளால் வெட்டி ஏழு பவுன் தங்க செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிய அந்த மர்ம நபரை வடுவூர் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தங்க செயினை பறித்து சென்ற சுரேஷ் (24) என்பவரை வடுவூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அந்த செயினையும் பரிமுதல் செய்தனர்.


